பொலிஸ் மா அதிபர் உயர் நீதிமன்றில் வழங்கிய வாக்குறுதி!

#SriLanka #Police #Court Order
Mayoorikka
2 years ago
பொலிஸ் மா அதிபர்  உயர் நீதிமன்றில் வழங்கிய வாக்குறுதி!

போராட்டச் சம்பவங்களின் பின்னர் இடமாற்றம் செய்யப்பட்ட 5 பொலிஸ் நிலையத் ​பொறுப்பதிகாரிகளுக்கு முன்னைய பொலிஸ் நிலையங்களுக்கு இணையான பொலிஸ் நிலையங்கள் வழங்கப்படவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் இன்று (05) உயர் நீதிமன்றில் தெரிவித்தார்.

 இது தொடர்பான மனு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

 இதற்காக நீதிமன்றில் ஆஜரான பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் சார்பில், மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஊடாக நீதிமன்றத்திற்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4