பண்டிகைக்காலங்களில் தாக்குதல் நடத்த சிலர் முயற்சி: பொலிஸ் மா அதிபர்

#SriLanka #Police #Attack
Mayoorikka
2 years ago
பண்டிகைக்காலங்களில் தாக்குதல் நடத்த சிலர் முயற்சி: பொலிஸ் மா அதிபர்

எதிர்வரும் ரமழான் பண்டிகை மற்றும் சிங்கள மற்றும் இந்து புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் வலியுறுத்தினார்.

 அமைச்சரின் பாதுகாப்புப் பிரிவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஐ.ஜி.பி., பயங்கரவாதத் தாக்குதல்களின் உலகளாவிய அச்சுறுத்தலை எடுத்துக்காட்டி, விஐபி பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

 "உலகளவில் தீவிரவாத மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் அடிக்கடி எதிர்பாராத விதமாக நிகழ்கின்றன. இது விழிப்புணர்வின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது" என்று ஐஜிபி கூறினார். இதேவேளை, பொது அமைதியின்மையை தூண்டும் வகையில் அரசியல், மத மற்றும் கலாசார அம்சங்களின் மீது தாக்குதல் நடத்த சிலர் முயற்சிப்பதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். ரமழான் பண்டிகை மற்றும் சிங்கள, இந்து புத்தாண்டின் போது பாதுகாப்பிற்கு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். 

பாதுகாப்பு நிலைமைகள் விரைவாக மாறலாம். ஈஸ்டர் தாக்குதல் அளவில் இல்லாவிட்டாலும், ஏனைய சம்பவங்கள் நிகழலாம். தீவிரவாதம், பயங்கரவாதம் போன்ற சமூகப் பிரச்சினைகளுக்கு நாம் தீர்வு காண வேண்டும். ," என்று ஐஜிபி கூறினார். இதற்கிடையில், ரமழானின் போது மசூதிகளுக்கு சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை அமுல்படுத்தியுள்ளதாகவும், 7,500 க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4