வவுனியா நெளுக்குளத்தில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு
#SriLanka
#Vavuniya
Mayoorikka
1 year ago
வவுனியா நெளுக்குளத்தில் முதியவர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை வவுனியா நெளுக்குளம், குளத்தில் முதியவர் ஒருவரின் சடலம் இருப்பதை அவதானித்த பொதுமக்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
