பாகிஸ்தானில் இடம்பெற்ற கோர விபத்து : 17 பேர் பலி!
#SriLanka
#world_news
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
3 weeks ago
பாகிஸ்தானில் லாரி கவிழ்ந்ததில் 17 பேர் உயிரிழந்தனர்.
யாத்ரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற ட்ரக் வண்டியொன்று பாரிய பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் மேலும் 38 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து இடம்பெற்ற போது பாரவூர்தியில் சிறுவர்கள் உட்பட 60 பேர் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.