ஷவர்மா சாப்பிட்ட 80 பேருக்கு நேர்ந்த கதி
#Hospital
#Food
#Poison
#Hotel
#Zambia
Prasu
3 weeks ago
தென் ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவின் காப்பர்பெல்ட் மாகாணத்தில் உள்ள ஓட்டலில் வாடிக்கையாளர்கள் ஷவர்மா வாங்கி சாப்பிட்டுள்ளனர்.
சிறிது நேரத்தில் ஷவர்மா வாங்கி சாப்பிட்ட அவர்கள் வாந்தி எடுத்து மயங்கினர். ஷவர்மா சாப்பிட்டதால் உடல் நலக்கோளாறு ஏற்பட்டு 80 பேர் நிலைகுலைந்தனர்.
தொடர்ந்து அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகே உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் ஷவர்மா சாப்பிட்டவர்களின் உணவில் விஷம் கலந்திருந்ததால் உடல்நலக்கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
நோயாளிகள் அனைவருக்கும் காய்ச்சல் மற்றும் தீவிர வயிற்றுபோக்கு ஏற்பட்டது. அவர்களுக்கு டாக்டர்கள் சிசிச்சை அளித்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
இதனிடையே புகாரின்பேரில் ஷவர்மா விற்ற ஓட்டல் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.