சிரியாவில் ஈரானிய தூதரகம் மீது தாக்குதல் - 7 பேர் மரணம்

#Death #Attack #Embassy #Iran #Syria
Prasu
1 week ago
சிரியாவில் ஈரானிய தூதரகம் மீது தாக்குதல் - 7 பேர் மரணம்

சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கசில் அமைந்த ஈரான் நாட்டின் தூதரகம் மீது கடந்த 1-ந்தேதி இஸ்ரேல் படைகள் அதிரடி தாக்குதல் நடத்தின. 

இதில், ஈரானின் இஸ்லாமிய புரட்சி படையை சேர்ந்த தளபதிகள் அந்தஸ்திலான 3 முக்கிய அதிகாரிகள் உள்பட 7 பேர் மரணமடைந்தனர். 

இதனால் ஆத்திரமடைந்த ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என சூளுரைத்தது. 2 வாரங்களாக அந்த பகுதியில் பதற்ற நிலை நீடித்தது. இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது. 

நூற்றுக்கும் மேற்பட்ட நடுத்தர ரக பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளையும், 30-க்கும் கூடுதலான தரைவழி தாக்குதல் நடத்த கூடிய ஏவுகணைகள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை கொண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

எனினும், இதனை இஸ்ரேல் முறியடித்தது. ஈரானின் தாக்குதலை, இஸ்ரேல் மற்றும் அதன் கூட்டணி அரசுகள் 99 சதவீதம் வழிமறித்து தடுத்து நிறுத்தியது. 

இவற்றில், 79 ஆளில்லா விமானங்கள் மற்றும் 3 ஹைப்பர்சோனிக் ரக ஏவுகணைகள் ஆகியவற்றை அமெரிக்க ராணுவம் தாக்கி அழித்தது.