சர்வதேச இறையாண்மை பத்திரங்களை மறுசீரமைப்பது தொடர்பாக உடன்பாடு எட்டப்படும் - ஷெஹான் சேமசிங்க!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
சர்வதேச இறையாண்மை பத்திரங்களை மறுசீரமைப்பது தொடர்பாக உடன்பாடு எட்டப்படும் - ஷெஹான் சேமசிங்க!

சர்வதேச இறையாண்மை பத்திரங்களை மறுசீரமைப்பது தொடர்பாக பத்திரப்பதிவுதாரர்களுடன் மேலும் கலந்துரையாடல்களில் உடன்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். 

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையில் இலங்கை அதிகாரிகள் நல்லெண்ணத்துடன் இணைந்து கொள்வார்கள் என்றும், இலங்கை அதிகாரிகள் அனைவரையும் நியாயமாக கையாள்வதற்கும் அத்தகைய பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்க்கப்படும் அதிகபட்ச வெளிப்படைத்தன்மையை உருவாக்குவதற்கும் பணியாற்றுவார்கள் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் கூறியுள்ளார். 

இலங்கையின் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச இறையாண்மை பத்திரதாரர்களுடனான பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் குறித்து, நிதியமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

சர்வதேச இறையாண்மை பத்திரங்களை வைத்திருப்பவர்களின் முன்மொழிவுகள் குறித்து சர்வதேச நாணய நிதியத்திற்கு அறிவிக்கப்பட்டு அவர்களின் அறிவுறுத்தல்களின்படி மேலதிக பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4