சிறையில் உள்ள குற்றவாளிக்கு பற்பசை மூலம் போதைப்பொருள் விநியோகம்!

#SriLanka #Colombo #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
சிறையில் உள்ள குற்றவாளிக்கு பற்பசை மூலம் போதைப்பொருள் விநியோகம்!

கொழும்பு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபருக்கு கொண்டுவரப்பட்ட பற்பசையில் போதைப்பொருள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த சம்பவம் நேற்று  (17.04) பிற்பகல் 01.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

கொழும்பு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரை பார்ப்பதற்காக வருகை தந்த நபர் ஒருவர், அவரிடம் பற்பசை ஒன்றை வழங்கியுள்ளார். 

குறித்த பற்பசை குழாயில் ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் ஒரு சிறிய பொதி மறைத்துவைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில் பார்வையாளர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த சிறைச்சாலை அவசரகால பதில் தந்திரோபாயப் படை அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். 

கைது செய்யப்பட்டவர் சந்தேகநபரின் நண்பரும் மட்டக்குளிய பிரதேசத்தை சேர்ந்தவருமாவார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4