தேர்தலுக்கு முன் ஆளுநர் பதவிகளில் மாற்றம்!
#SriLanka
#Election
#Governor
Mayoorikka
1 week ago
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக மாகாணங்களின் ஆளுநர்களை மாற்றுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க திட்டமிட்டுள்ளார் என்று அறிய வருகின்றது.
இதன்படி, வடமேல் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தென் மாகாணத்துக்கு நிய மிக்கப்படவுள்ளார். இதனால், ஏற்படும் வடமேற்கு மாகாண ஆளுநர் பதவிக்கு நஸீர் அஹமட் நிய மிக்கப்படவுள்ளார் என்று கூறப்படுகின்றது.
இதேநேரம், தற்போது தென் மாகாணஆளுநராக இருக்கும் விலீ கமகேவுக்கு ஓய்வு வழங்க ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதற்கு, பஸில் ராஜபக்வும் இணங்கியுள் ளார் என்று கூறப்படுகின்றது.
ஓய்வு
பெறும் விலீ கமகே பொதுஜன பெரமுன
வின் தேர்தல் நடவடிக்கைக்கு பொறுப்
பாக செயல்படவுள்ளார் என்று கூறப்படு
கின்றது.