வாக்களிக்க சென்ற நடிகர் சூரிக்கு நேர்ந்த கதி

#India #Election #Actor #Election Commission #Missing #name
Prasu
1 week ago
வாக்களிக்க சென்ற நடிகர் சூரிக்கு நேர்ந்த கதி

தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவைத் தொகுதிக்கும் கடந்த 19ஆம் திகதி ஒரேகட்டமாக பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது.

சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் கடந்த மக்களவைத் தேர்தல்களை விட வாக்குப்பதிவு சதவீதம் கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், முதல் பொது மக்கள் அனைவரும் மும்மரமாக வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வரும் நடிகர் சூரி தனது வாக்கினை செலுத்த போது அவரது பெயர் குறிப்பிடப்படவில்லை என தெரிவிக்கபப்ட்டுள்ளது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த சூரி தமக்கு இந்த ஏமாற்றம் மிகவும் வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இது யாருடைய தவறு என்று தெரியவில்லை. மக்கள் அனைவரும் தங்களது ஜனநாயக உரிமையை கொண்டு வாக்களிக்க வேண்டும் எனவும் நடிகர் சூரி கேட்டுக்கொண்டுள்ளார்.