கொழும்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை பெருந்தோட்ட மக்களுக்கு வழங்க நடவடிக்கை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 week ago
கொழும்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை பெருந்தோட்ட மக்களுக்கு வழங்க நடவடிக்கை!

இலவச காணி உரிமை வழங்கும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், கொழும்பில் உள்ள 50,000 அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமையை பெருந்தோட்ட மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம், அந்த மக்களுக்கு காணி வழங்குவதற்கான தீர்மானம் தற்போது எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலையில் அரசியல் ரீதியாக பிளவுபடக்கூடாது, பிரிந்தால் நாட்டில் இன்று இந்த முன்னேற்றத்தை காண முடியாது, கட்சி அரசியலை மறந்து முன்னேற வேண்டும். 

மேலும், இதன் வளர்ச்சிக்காக சில பாரிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளோம். ஊவா பிராந்தியம்” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.