வவுனியா வைத்தியசாலையில் கர்பிணி தாயும், குழந்தையும் பலி!

#SriLanka #Vavuniya #Death #Pregnant
Lanka4
1 week ago
வவுனியா வைத்தியசாலையில் கர்பிணி தாயும், குழந்தையும் பலி!

வவுனியா வைத்தியசாலையின் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்பிணித்தாய் குளியலறையில் தவறி வீழ்ந்து சாவடைந்ததுடன் அவரது,வயிற்றில் இருந்த சிசுவும் மரணமடைந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், மதவாச்சி பகுதியை சேர்ந்த நிறைமாத கர்பிணித்தாய் ஒருவர் வவுனியா வைத்தியசாலையின் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவர் இன்றையதினம் விடுதியில் உள்ள குளியலறைக்கு சென்றநிலையில் தவறி வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அவர் மரணமடைந்துள்ளார்.

இதனையடுத்து அவர் மீட்கப்பட்டு அவரது வயிற்றில் உள்ள குழந்தையை காப்பாற்றுவதற்கான சத்திரசிகிச்சையினை வைத்தியர்கள் மேற்கொண்டுள்ளனர்.எனினும் வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக அறிவதற்காக வவுனியா வைத்தியசாலை பணிப்பாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதும் அது பலனளிக்கவில்லை.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.