நள்ளிரவில் வானில் ஏற்படும் மாற்றம் : விண்கல் மழை பொழிவை வெறும் கண்ணால் பார்க்க முடியும்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
நள்ளிரவில் வானில் ஏற்படும் மாற்றம் : விண்கல் மழை பொழிவை வெறும் கண்ணால் பார்க்க முடியும்!

வருடாந்தம் தோன்றும் முக்கிய விண்கல் மழைகளில் ஒன்றான லிரிட்ஸ் விண்கல் மழை இன்று (22.04) நள்ளிரவு வடக்கு வானில் தோன்றும் என விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 இந்த விண்கல் மழை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 29 வரை செயலில் இருக்கும். 

இந்த விண்கல் மழை வீணை விண்மீன் தொகுப்பில் காணப்படுவதால் லிரிட்ஸ் என அழைக்கப்படுவதாக விண்வெளி விஞ்ஞானி பொறியியலாளர் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.  

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், "இந்த விண்கல் மழையில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 20 விண்கற்கள் விழும். இது இன்று இரவு அல்லது நாளை காலை உச்சத்தில் இருக்கும். 

இன்று நள்ளிரவுக்குப் பிறகு பார்க்கலாம். இன்று முழு நிலவை பார்ப்பதால் ஒரு பிரச்சனை. அதனால், இது இந்த விண்கல் மழையை காலை 4-5 மணிக்குள் வடக்கு திசையில் வெறும் கண்ணால் பார்க்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4