ஈரான் ஜனாதிபதியின் வருகை: இலங்கை எடுக்கவுள்ள முக்கிய நடவடிக்கை
#SriLanka
#President
#Iran
Mayoorikka
2 years ago
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.
பொலிஸாரும் முப்படையினரும் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர் என அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளார் என வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி நேற்று முன்தினம் உறுதிப்படுத்தியிருந்தார்