பாராளுமன்ற அவை நடவடிக்கைகள் சபாநாயகர் தலைமையில் ஆரம்பம்!
சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஏற்கனவே தொடங்கியுள்ளது. புத்தாண்டின் பின்னர் முதல் தடவையாக இன்று (24.04) பாராளுமன்றம் கூடியது.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று, நாளை (25.04) மற்றும் வெள்ளிக்கிழமை (26.04) நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தவிர, குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தச் சட்டமூலம் மற்றும் விஷம், அபின் மற்றும் அபாயகரமான போதைப்பொருள் கட்டளைச் சட்டத்தின் கீழான உத்தரவுகளின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று நடைபெறவுள்ளது.
இதேவேளை, இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் இன்று பொது வர்த்தக குழு அல்லது கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, தேசிய வர்த்தக முகாமைத்துவ நிறுவனம் மற்றும் மஹாபொல உயர்கல்வி உதவித்தொகை நிதி என்பன நாளை கோப் குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஸ்ரீலங்கன் விமான சேவையின் தலைவர்கள் கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.