உள்ளுராட்சி நிறுவனங்களின் ஊழியர்களுக்கான நிரந்தர நியமனம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 week ago
உள்ளுராட்சி நிறுவனங்களின் ஊழியர்களுக்கான நிரந்தர நியமனம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் திரு.ஜனக வக்கம்புர இதனைத் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இதன்படி, உள்ளூராட்சி நிறுவனங்களில் உள்ள 8,400 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு கவனம் செலுத்தப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார். இந்த சிறப்பு கலந்துரையாடல் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நீடித்தது.