பாராளுமன்ற கட்டடத்தின் புனரமைப்பு பணிகளை உடனடியாக ஆரம்பிக்க நடவடிக்கை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
பாராளுமன்ற கட்டடத்தின் புனரமைப்பு பணிகளை உடனடியாக ஆரம்பிக்க நடவடிக்கை!

பாராளுமன்ற கட்டிடத்தின் புனரமைப்பு பணிகளை உடனடியாக ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

 40 வருடங்கள் பழமையான இந்த பாராளுமன்ற கட்டிடத்தில் சில புனரமைப்புகள் தேவைப்படுவதாகவும், அந்த புனரமைப்புகளை கண்டறிந்து அதற்கான பணிகளை ஆரம்பிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

அதன்படி, கடந்த 25ம் திகதி சபாநாயகர் தலைமையில் நடந்த ஆலோசனைக் குழு கூட்டத்தில், மேற்கொள்ள வேண்டிய பணிகள் கண்டறியப்பட்டு, நகர்ப்புற வளர்ச்சி ஆணையம் மற்றும் மத்திய பொறியியல் ஆலோசனைக் குழுவின் தலையீட்டில் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அதற்குத் தேவையான ஏற்பாடுகளை ஒதுக்குவதற்கு கொள்கை உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர்  ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4