கிளிநொச்சி இரணைமடு பகுதியில் ஜீவ ஊற்றின் 119 ஆவது இல்லம் கையளிப்பு!

#SriLanka #Kilinochchi
Mayoorikka
1 week ago
கிளிநொச்சி இரணைமடு பகுதியில் ஜீவ ஊற்றின் 119 ஆவது இல்லம் கையளிப்பு!

நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வாழ்வதற்கே வழியின்றி தவிக்கின்ற போதிலும் "ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பானது இப் புதிய ஆண்டிலிருந்து புது மாற்றங்களுடன் இல்லங்களை நிர்மாணித்து வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 அந்தவகையில் கடந்த 01.05.2024 அன்று ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் 119 ஆவது இல்லமும் Ravi Rajani family_ ஜீவ ஊற்று நியூஸ்லாந்து_கிளை இனரின் ஆவது இல்லமும் பயன்பெறும் குடும்பத்தினரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

images/content-image/2024/05/1715073032.jpg

 இவ் இல்லமானது கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இரணைமடு பகுதியில் பல்வேறான இன்னல்களுடன் வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த குடும்பத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.

images/content-image/2024/05/1715073047.jpg

 இதற்கான நிதி உதவியை ரவி அண்ணாவின் மகன் Edwin Caleb Titus அவர்கள் வழங்கியுள்ளார். இவ் மகத்தான உதவியினை நல்கிய சகோதரனுக்கு எம் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

images/content-image/2024/05/1715073064.jpg

 அத்தோடு கூட தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்கின்றதால் ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.

images/content-image/2024/05/1715073090.jpg

images/content-image/2024/05/1715073260.jpg