இலங்கை முழுவதும் பிற்பகல் வேளையில்வானிலையில் ஏற்படும் மாற்றம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கை முழுவதும் பிற்பகல் வேளையில்வானிலையில் ஏற்படும் மாற்றம்!

நாட்டின்  பல மாகாணங்களில், 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகபட்சம் 100 மி.மீற்றருக்கு மேல் இருக்கலாம் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. 

தென் மாகாணத்தின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இடியுடன் கூடிய மழை தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4