ஈரானிய ஜனாதிபதிக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த ரணில்!
#SriLanka
#Sri Lanka President
#Ranil wickremesinghe
#Iran
Mayoorikka
2 years ago
ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் அமீர் அப்துல்லாஹியன் மற்றும் பிற மூத்த ஈரானிய அதிகாரிகளின் துயர மரணத்தால் இலங்கை ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க X செய்தியில் தெரிவித்துள்ளார்.
"அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ஈரான் அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்களது பிரார்த்தனைகள் ஜனாதிபதி ரைசி மற்றும் அவரது பரிவாரங்களின் குடும்பத்தினருடன் இருக்கின்றன" என்று ஜனாதிபதி கூறினார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே