பிரான்ஸ் தூதுவரின் மரணம் தொடர்பில் இறுதித் தீர்மானம்!
#SriLanka
#Death
#France
Mayoorikka
2 years ago
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவரின் மரணம் தொடர்பில் அவரது இறுதிக் கிரியைகள் இந்நாட்டில் நடைபெறுமா? அல்லது அவரது உடல் பிரான்ஸுக்கு எடுத்துச் செல்லப்படுமா? என்பது குறித்து இன்று (27) இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என பிரான்ஸ் தூதரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் Jean Francois Pactet இராஜகிரியில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் உயிரிழந்த நிலையில், நேற்று பிற்பகல் வெலிக்கடை பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
திடீர் சுகவீனம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனது 56 ஆவது வயதில் பிரான்ஸ் தூதுவர் இவ்வாறு உயிரிழந்தார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே