மழையுடன் கூடிய வானிலையே தொடரும் என முன்னுரைப்பு!
#SriLanka
#weather
#Rain
#sri lanka tamil news
Thamilini
2 years ago
சுறுசுறுப்பான தென்மேற்கு பருவக்காற்று நிலைமைகள் காரணமாக, தீவில் தற்போதைய மழை மற்றும் காற்றின் நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் மி.மீ. 100க்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, மேல், தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் காற்றானது கி.மீ. 50-60 வேகத்தில் காற்று வீசக்கூடும்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே