கிராம உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்கு சாத்தியமான தீர்வுகளை முன்வைக்குமாறு பணிப்புரை!

#SriLanka #sri lanka tamil news #Tamil News
Thamilini
2 years ago
கிராம உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்கு சாத்தியமான தீர்வுகளை முன்வைக்குமாறு பணிப்புரை!

கிராமிய உத்தியோகபூர்வ சேவையின் பிரச்சினைகளுக்கு முரண்பாடுகள் இல்லாத வகையில் சாத்தியமான தீர்வுகளை முன்வைக்குமாறு ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியுமான  சாகல ரத்நாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கிராம உத்தியோகபூர்வ சேவையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க சம்மேளனம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார். 

கிராம உத்தியோகத்தர் சேவை அரசியலமைப்பு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் சம்பள விகிதத்தில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

கிராம அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில் பல பிரச்னைகள் எழுந்துள்ளதால், அவற்றை தீர்த்து, சேவை சாசனம் உருவாக்க வேண்டும் என, கிராம அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு சாகல ரத்நாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 

இதனைத் தொடர்ந்தே அவர் மேற்படி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இதேவேளைதற்போதுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடி பொதுவான இணக்கப்பாட்டுக்கு வருமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4