மைத்திரியின் குற்றச்சாட்டை மறுத்தது கத்தோலிக்க திருச்சபை
#SriLanka
#Maithripala Sirisena
Mayoorikka
2 years ago
உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களிற்கு பல தரப்பினர் வழங்கிய நிதி உதவி பாதிக்கப்பட்டவர்களை சென்றடையவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தெரிவித்துள்ளதை இலங்கை கத்தோலிக்க திருச்சபை நிராகரித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறுதாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களிற்கு ஏற்கனவே திருச்சபை 500 மில்லியன் ரூபாயினை வழங்கியுள்ளது என கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை ஜூட் கிருசாந்த தெரிவித்துள்ளார்.
இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் சமூக சேவை பிரிவான செத்சரன மூலம் இந்த நிதி உதவியை வழங்கியுள்ளோம்,நாங்கள் செய்யும் உதவிகள் குறித்து எவருக்கும் தெரிவிப்பதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே