இலங்கை திவாலாகிவிட்டதா? : ஹர்ஷ டி சில்வா கேள்வி!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
ஒரு நாடு திவாலாகிவிட்டதாக மதிப்பிடும் முகவர் நிலையங்களே அறிவிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
“இலங்கை திவால் நிலையில் இருந்து வெளியே வந்துவிட்டது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பார் என்று கேள்விப்பட்டோம். எவ்வாறாயினும், இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுள்ளது என்பதை மதிப்பீட்டு முகவர் நிலையங்களே ஏற்றுக்கொண்டு அறிவிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை திவால் நிலையில் இருந்து வெளிவர மூன்று சி தரவரிசையை பெற்றிருக்க வேண்டும்.
தவிர, ISB வைத்திருப்பவர்களுடன் இலங்கை ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை. எனவே, நம் நாடு திவாலாகிவிட்டதாக எப்படிச் சொல்ல முடியும்?’’ என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே