காசா முனையில் இஸ்ரேல் தாக்குதல் - 42 பேர் பலி

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
2 months ago
காசா முனையில் இஸ்ரேல் தாக்குதல் - 42 பேர் பலி

காசா முனையின் ரபாவில் உள்ள ஷதி அகதிகள் முகாம் மற்றும் தபா ஆகிய பகுதிகளில் இஸ்ரேல் படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினர்.  

இந்த தாக்குதலில் ஷதி முகாமில் 24 பேரும், தபா நகரில் 18 பேரும் என மொத்தம் 42 பேர் உயிரிழந்தனர். 

இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 37 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காசா முனையில் இஸ்ரேல் படையினரும் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.