கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி உடன்பாட்டை எட்டிய இலங்கை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி உடன்பாட்டை எட்டிய இலங்கை!

இருதரப்பு கடன் வழங்குவோரின் உத்தியோகபூர்வ குழுவுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி உடன்பாட்டை இலங்கை எட்டியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

2024-ம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறும் பாரீஸ் மாநாட்டுடன் இணைந்து இந்த இறுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

5.8 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக இறுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோர் இந்த இறுதி உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் இணைத் தலைவர்கள், அதிகாரப்பூர்வ கடன் வழங்கும் நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவில் கலந்து கொண்டனர்.

இலங்கையின் சார்பாக, உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழுவின் தலைவர்கள், பிரான்ஸ், இந்தியா மற்றும் ஜப்பான் மற்றும் சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி மற்றும் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவின் உறுப்பினர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கடன் நெருக்கடிக்கு தீர்வு காணவும், இந்த முக்கிய மைல்கல்லை எட்டுவதற்கு குழு செயலகத்தின் அர்ப்பணிப்பு, நாட்டின் பொருளாதாரத்தில் நம்பிக்கையை அதிகரித்து வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் தலைமைத்துவமும் இலங்கையின் பொருளாதாரத்தை இந்த மைல்கல்லை நோக்கி நகர்த்துவதற்கு உதவியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர்  ஷெஹான் சேமசிங்க வலியுறுத்துகிறார்.

இதேவேளை, இலங்கைக்கும் சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கிக்கும் இடையில் இருதரப்பு கடன் ஒப்பந்தங்களை கைச்சாத்திடும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளதாக  ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4