ஹிருணிகாகவுக்கு 3 வருட கடூழியச் சிறைத்தண்டனை! நீதிமன்றம் தீர்ப்பு
#SriLanka
#Sri Lanka President
Mayoorikka
2 days ago
![ஹிருணிகாகவுக்கு 3 வருட கடூழியச் சிறைத்தண்டனை! நீதிமன்றம் தீர்ப்பு](https://ms.lanka4.com/images/thumb2023/1719558938.png)
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றினால் 3 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தெமட்டகொட பகுதியிலுள்ள கடை ஒன்றில் பணிபுரிந்த இளைஞன் ஒருவனை கடத்திச் சென்று தவறான முறையில் தடுத்து வைத்தமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்தத் தீர்ப்பை அறிவித்தார்.