சிறீதரன் எம்.பிக்கு இனந்தெரியாத நபர்களினால் அச்சுறுத்தல்!
#SriLanka
#sritharan
Mayoorikka
2 years ago
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின், யாழ்ப்பாணத்திலுள்ள இல்லத்தின் முன்பாக இனந்தெரியாத நபர்களின் அச்சுறுத்தும் வகையிலான நடமாட்டம் இன்றையதினம் (28) அவதானிக்கப்பட்டுள்ளது.

இலக்கத்தகடுகள் மறைக்கப்பட்ட நான்கு மோட்டார்சைக்கிள்களில், முகமூடிகள் அணிந்தவாறு வருகைதந்த இனந்தெரியாத நபர்களின் நடமாட்டம், பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனையும், அவரது குடும்பத்தினரையும் அச்சுறுத்தும் வகையிலான திட்டமிட்ட செயல் என்பதை, கண்காணிப்புக் கமராக்களில் பதிவாகியுள்ள காணொளிக் காட்சிகள் உறுதிப்படுத்துகின்றன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே