மாநாட்டிற்காக இஸ்ரேல் உயர் அதிகாரிக்கு அழைப்பு விடுத்த அமெரிக்கா

#America #World #Summit #2024 #Noto
Prasu
2 years ago
மாநாட்டிற்காக இஸ்ரேல் உயர் அதிகாரிக்கு அழைப்பு விடுத்த அமெரிக்கா

நேட்டோ மாநாடு அடுத்த மாதம் 9-ந்தேதியில் இருந்து 11-ந்தேதி வரை அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடக்கிறது. 

இதில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் கலந்து கொள்கிறார். நேட்டோ அமைப்பின் 75-வது ஆண்டு விழாவாக இந்த மாநாடு அமைகிறது.

இதனால் அமெரிக்கா இஸ்ரேல் நாட்டின் வெளியறவுத்துறை மந்திரி கட்ஸ்-க்கு அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் கட்ஸ்-க்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இஸ்ரேலைத் தொடர்ந்து பல அரபு நாடுகளுக்கும் அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் உள்பட 32 நாடுகள் நேட்டோவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

உக்ரைன் நேட்டோவில் இணைய விரும்பியதால் ரஷியா அந்த நாடு மீது படையெடுத்தது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4