முல்லைத்தீவில் ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் வீடொன்று கையளிப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
முல்லைத்தீவில் ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் வீடொன்று கையளிப்பு!

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பானது பல்வேறான மனிதநேயமிக்க பணிகளையாற்றுகின்றது. விசேடமாக நிரந்தர வீடின்றி அல்லலுறுகின்ற மக்களிற்கு நிரந்தர வீடுகளை நிர்மாணித்து கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

அந்தவகையில் கடந்த 29.06.2024 அன்று ஜீவ ஊற்று அன்பின் கரத்தின்  இல்லம் பயன்பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

இவ் இல்லமானது முல்லைத்தீவு தேவிபுரத்தில் பல்வேறான இன்னல்களுடன் வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த குடும்பத்திற்கே வழங்கப்பட்டுள்ளது. 

images/content-image/1719753421.jpg

 இதற்கான நிதி உதவியை கோவில்வயல் இயக்கச்சியை சேர்ந்த அமரத்துவமடைந்த பாலவினாயகமூர்த்தி பாலவினோதினி அவர்களின் 34 ஆவது பிறந்ததின நினைவாக பாலவினாயகமூர்த்தி பாலயோகமணி குடும்பத்தினர் வழங்கியுள்ளார்கள். 

 இவ் மகத்தான உதவியினை நல்கிய உறவுகளுக்கு எம் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். அத்தோடு கூட தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்கின்றதால் ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4