யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள சம்பந்தனின் பூதவுடல்: மக்கள் அஞ்சலி

#SriLanka #R. Sampanthan
Mayoorikka
2 years ago
யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள சம்பந்தனின் பூதவுடல்: மக்கள் அஞ்சலி

மறைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தனின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக இன்று வியாழக்கிழமை (04) கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது.

images/content-image/2024/07/1720075672.jpg

 யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட சம்பந்தனின் பூதவுடல், யாழில் உள்ள தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா நினைவிடத்தில் இன்று மாலை 4.00 மணி வரை மறைந்த சம்பந்தனின் பூதவுடலுக்கு மக்கள் அஞ்சலி செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

images/content-image/2024/06/1720075686.png

 சம்பந்தனின் இறுதிக்கிரியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (07) திருகோணமலையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

images/content-image/2024/07/1720075704.png

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4