சுகாதார துறையை சீர்குலைக்க சதி : வைத்தியர் குற்றச்சாட்டு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
சுகாதார துறையை சீர்குலைக்க சதி : வைத்தியர் குற்றச்சாட்டு!

எதிர்காலத்தில் சுகாதாரத்துறையை சீர்குலைக்கும் அரசியல் சதி இடம்பெறும் என டொக்டர் ருக்ஷான் பெல்லான தெரிவித்துள்ளார்.  

அதற்காக பொருளாதார சிரமங்களுடனான ஊழியர்களை நியமிக்க அந்த குழுக்கள் முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

சிறிகொத்த கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசிய சுகாதார தொழிற்சங்க சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்ட போதே வைத்தியர் ருக்ஷான் பெல்லான இவ்வாறு தெரிவித்தார்.  

இதேவேளை, பல கோரிக்கைகளை முன்வைத்து நாளை மறுதினம் வைத்தியசாலை கனிஷ்ட ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ஐக்கிய சுகாதார ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தம்பிட்டியே சுகதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4