சம்பிரதாய அரசியலை விட நாட்டைப் பற்றி சிந்திக்கும் அரசியலே அவசியம்: ஜனாதிபதி

#SriLanka #Sri Lanka President
Mayoorikka
2 years ago
சம்பிரதாய அரசியலை விட நாட்டைப் பற்றி சிந்திக்கும் அரசியலே அவசியம்: ஜனாதிபதி

சம்பிரதாய அரசியலில் இருந்து விலகி நாட்டைப் பற்றி சிந்திக்கும் அரசியல் கலாச்சாரம் நாட்டின் முன்னேற்றத்திற்கு அவசியமானது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.

 ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள பொறுப்பை குறைத்து மதிப்பிட முடியாது எனவும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டத்தரணிகளுடனான சந்திப்பிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4