ஜனாதிபதி தேர்தல் எப்போது! விசேட கலந்துரையாடலில் ஈடுபட்ட தேர்தல்கள் ஆணைக்குழு
#SriLanka
#Election
#Election Commission
Mayoorikka
2 years ago
ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று (16) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.
வேறு எந்த காரணமும் இந்த திகதியை அமல்படுத்துவதில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் அவர் கூறினார்.
மேலும் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டுமானால் எதிர்வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே