2024 ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக களமிறங்கும் விஜயதாச ராஜபக்ஷ!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
2024 ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக களமிறங்கும் விஜயதாச ராஜபக்ஷ!

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தன்னையும் வேட்பாளராக முன்னிறுத்தப் போவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், "நேர்மையான நாடு, சுதந்திர நாளை, பசுமை நிலம், புதிய பாதையை அடைய நாம் உழைக்க வேண்டும். அதை வழிநடத்துவதில் முன்னோடியாக இருக்க நான் தயாராக இருக்கிறேன். '

இந்தியாவில் உள்ள பேரரசர் அசோகர், ஒரு நாட்டின் ஆட்சியாளர் தனது நாட்டு மக்களை குழந்தைகளைப் போல கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற உன்னத பொன்மொழியை மதித்து, அதை நனவாக்க எனது முயற்சிகளுக்கு உங்கள் முழு ஆசிர்வாதம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

 2024 ஜனாதிபதித் தேர்தல் நம் அனைவரின் எதிர்கால தலைவிதியையும் தீர்மானிக்கும் திருப்புமுனையாக இருக்கும். தாய்நாட்டின் வாழ்வு அல்லது அழிவை தீர்மானிக்கும் காரணியாக உங்கள் வாக்கு இருக்கும்.

 உங்களின் தலைவிதியை தீர்மானிக்கும் உரிமையை அரசியல்வாதிகளிடம் விட்டுவிட்டு நீங்கள் காத்துக்கொண்டிருப்பதால் இன்று நம் அனைவருக்கும் ஒரு சோகமான நிலை ஏற்பட்டுள்ளது. 

உலகம் மாறுவதை நீங்கள் காண விரும்பினால், உங்களைத் தவிர வேறு யாராலும் மாற்ற முடியாது. இலங்கை அரசின் வெற்றிக்காகவும், இலங்கை தேசத்தின் வெற்றிக்காகவும் இந்த அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுகிறேன்" என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4