எதிர்கட்சியினரின் கேள்விக்கு பதிலளித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன

#SriLanka #Police #Parliament #speaker
Prasu
1 month ago
எதிர்கட்சியினரின் கேள்விக்கு பதிலளித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன

தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் விளக்கமளித்திருந்தார்.

பொலிஸ் மா அதிபரை நியமிப்பதற்கான தீர்மானம் சரியானது, சட்டபூர்வமானது, அரசியலமைப்புக்கு உட்பட்டது மற்றும் நல்லெண்ண அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

 தற்போது எழுந்துள்ள பிரச்சினைக்கு ஜனாதிபதியால் கூட தீர்வு காண முடியாது என தெரிவித்த சபாநாயகர், நீதிமன்றத்தின் மூலமே தீர்வு காணப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.