இலங்கையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
2 months ago
இலங்கையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.  

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன்,  காரணமாக அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடா மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வங்காள விரிகுடாவில் 13 மற்றும் 23 வடக்கு அட்சரேகைகள் மற்றும் 55 மற்றும் 70 கிழக்கு தீர்க்கரேகைகள் மற்றும் 13 மற்றும் 18 வடக்கு அட்சரேகைகள் மற்றும் 83 மற்றும் 93 கிழக்கு தீர்க்கரேகைகளுக்கு இடையில் அரபிக்கடலில் 70-80 km/h வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 இதன்காரணமாக குறித்த பிரதேசத்தில் மீன்பிடி மற்றும் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் பணியாளர்கள் உடனடியாக காணி அல்லது பாதுகாப்பான இடத்திற்கு வருமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.  

மறு அறிவித்தல் வரை அந்த கடற்பரப்பில் கடற்றொழில் செய்ய வேண்டாம் என திணைக்களம்  கடற்றொழிலாளர்களுக்கு அறிவித்துள்ளது.  

இதேவேளை, சப்ரகமுவ மாகாணத்தில் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும் எனவும், மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.  

மத்திய மலையகத்தின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது (50-55) கி.மீற்றர் சூறை காற்று வீசும் எனவும் முன்னுரைக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!