வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட செய்தி!

#SriLanka #Sri Lanka President #Election
Mayoorikka
1 month ago
வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட செய்தி!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்தைத் தவிர மாற்று வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்க முடியுமெனத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 வாக்காளர்களுக்கு நியமிக்கப்பட்ட இடத்தில் வாக்களிக்க முடியாததற்கு நியாயமான காரணம் இருந்தால் மாற்று வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்று வாக்களிக்குமாறு கோரலாம் என ஆணைக்குழு வர்த்தமானி அறிவிப்பில் வலியுறுத்தியுள்ளது.

 இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், அடுத்த மாதம் 1ஆம் திகதி அல்லது அதற்கு முன், தேர்தல் ஆணைக்குழுவிற்கு படிவங்களை அனுப்ப வேண்டும்.

 மேலும், ஒவ்வொரு விண்ணப்பமும் விண்ணப்பதாரரின் குடியிருப்புப் பகுதி கிராம அதிகாரிகளால் சான்றளிக்கப்பட வேண்டும், இல்லையெனில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.