தேர்தலுக்காக இரு பொலிஸ் உயர் அதிகாரிகள் நியமனம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 month ago
தேர்தலுக்காக இரு பொலிஸ் உயர் அதிகாரிகள் நியமனம்!

தேர்தல் கடமைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட முகவரான பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்டவுக்கு மேலதிகமாக மற்றுமொரு பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

பிரதிப் பொலிஸ் மா அதிபர் பி. லியனகே மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.டி.ஜி.எல்.ஏ தர்மசேன ஆகியோர் அதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

 பொலிஸ் தலைமையகத்தில் தேர்தல் அலுவல்கள் தொடர்பான பிரிவு ஒன்று ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அந்த பிரிவுக்கு நிலைய கட்டளைத் தளபதி ஒருவர் நேற்று முதல் செயற்பட்டு வருகின்றார்.