மலையகப் பாடசாலைகளின் வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை!
#India
#SriLanka
#School
Mayoorikka
2 years ago
இந்திய அரசின் 300 மில்லியன் ரூபாய்கள் உதவியுடன் தோட்டப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக, 2019.06.04 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நிலவிய பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட விலை அதிகரிப்புகளால், குறித்த கருத்திட்டத்தின் நன்கொடையை 600 மில்லியன் ரூபாய்களாக அதிகரிப்பதற்கு இந்திய அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க, ஏற்புடைய ஆவணங்களில் கையொப்பம் இடுவதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே