மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி
#India
#SriLanka
#Cricket
Prasu
7 months ago

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிகெட் போட்டி தற்பொழுது ஆரம்பமாகியுள்ளது.
கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
முதல் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றதோடு, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிட்டதக்கது.



