இலங்கையில் விண்கல் மழை பொழிவு : வெற்றுக் கண்களால் காண வாய்ப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
இலங்கையில் விண்கல் மழை பொழிவு : வெற்றுக் கண்களால் காண வாய்ப்பு!

இலங்கையில் இன்று (11.08) நள்ளிரவுக்கு பின்னர் விண்கல் மழை பொழியும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. 

குறித்த நிகழ்வை வட பகுதியில் வசிக்கும் மக்கள் வெற்றுக் கண்ணால் பார்க்க முடியும் என்று  வானியலாளர் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.

பெர்சியஸ் விண்மீன் கூட்டத்திற்கு அருகில் விண்கல் மழை தோன்றியதால் விண்கல் மழை பெர்சியஸ் என்று அழைக்கப்படுகிறது.

ஜூலை நடுப்பகுதியிலிருந்து ஆகஸ்ட் நடுப்பகுதி வரை இந்த விண்கல் பொழிவு காணப்படுவது விசேட அம்சமாகும். 

ஒரு மணித்தியாலத்தில் சுமார் நூறு விண்கற்களை காண முடியும் எனவும், சமவெளிக்கு சென்று தடையின்றி பார்வையிட முடியும் எனவும் வானியலாளர் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4