பங்களாதேஷில் புதிய காபந்து அரசாங்கத்தின் கீழ் வழமைக்கு திரும்பும் அன்றாட விவகாரங்கள்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவியில் இருந்து நீக்கிய மாணவர் புரட்சியின் பின்னர் கொந்தளிப்பில் இருந்த பங்களாதேஷின் அன்றாட விவகாரங்கள் புதிய காபந்து அரசாங்கத்தின் கீழ் வழமைக்குத் திரும்பி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மாணவர்களின் பிடியில் இருந்த நெடுஞ்சாலைகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதில் காவல்துறை அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் நடந்த வன்முறையில் ஷேக் ஹசீனா கட்சியின் எம்.பி.க்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உட்பட 450க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.