நல்ல குணம் படைத்த நடிகர் ஜெய்சங்கர் - அப்படி என்ன செய்தார்?
![நல்ல குணம் படைத்த நடிகர் ஜெய்சங்கர் - அப்படி என்ன செய்தார்?](https://ms.lanka4.com/images/thumb/2024/08/1723750726.jpg)
அந்த நடிகர் தனது வீட்டு விசேஷங்கள் எதுவாக இருந்தாலும் ஏதாவது ஒரு அனாதை இல்லத்துக்குப் போய்த்தான் விருந்து வைத்து கொண்டாடுவாராம்.
முழு செலவையும் அவரே ஏற்று நடத்தி வைக்கும் அந்த விருந்தை அவரே முன் நின்று பரிமாறுவதுதானே முறை ? அதுதான் இல்லை !
ஒவ்வொரு விருந்துக்கும் யாராவது ஒரு பிரபலத்தை அழைத்து வந்து அவர்கள் கையால் அந்த அனாதைக் குழந்தைகளுக்கு விருந்து பரிமாற வைத்து அதைப் பார்த்து மகிழ்வாராம் நடிகர் ஜெய்சங்கர் .
ஏன் இப்படிச் செய்தார் ஜெய்சங்கர் ? புரிந்து கொள்ள முடியாத ஒரு நண்பர் இந்தக் கேள்வியை ஜெய்சங்கரிடமே கேட்டு விட்டாராம். “ஏங்க ஜெய், விருந்துக்கான எல்லா செலவையும் நீங்க பண்றீங்க.
அதை பரிமாறி புண்ணியம் தேடிக் கொள்வது மட்டும் யாரோ ஒரு பிரபலமா ? ஜெய்சங்கர் புன்னகைத்தாராம்.
நண்பர் விடவில்லை : “சிரிக்காதீங்க ஜெய், ஒண்ணு நீங்க பரிமாறுங்க. அல்லது உங்க மனைவி குழந்தைகளை விட்டு பரிமாற சொல்லுங்க. யாரோ ஒரு மூணாவது மனிதர்...” நண்பரின் பேச்சை இடைமறித்த ஜெய்சங்கர் சிரித்தபடி சொன்னாராம் இப்படி : “கொஞ்சம் பொறுங்க.
நான் கூப்பிட்டுட்டு வர்ற பிரபலங்களை கவனிச்சு இருக்கீங்களா ? அவங்க யாருமே இந்த மாதிரி அனாதை இல்லங்களுக்கெல்லாம் போய் உதவி செய்யற பழக்கம் இல்லாதவங்க. அதுக்கான நேரம் இல்லாதவங்க. அது பற்றின விவரம் தெரியாதவங்களாக கூட இருக்கலாம் .
அதனால இதை ஒரு வாய்ப்பா பயன்படுத்தி அவங்களை நான் கூப்பிடறேன். இந்த மாதிரியும் இடம் இருக்கு. இப்படிக் கூட உதவி செய்யலாம் என்று அறிமுகப்படுத்துகிறேன்.
அவ்வளவுதான் ! இப்படி வர்ற பத்து பேர்ல ஒரே ஒருத்தர் மனசில இந்த உதவி பதிஞ்சா கூடப் போதுமே ! எதிர்காலத்தில அவங்களும் கூட இதுமாதிரி உதவிகளைச் செய்ய முயற்சி செய்யலாம் இல்லையா ? அதுக்காகத்தான் இப்படி கூப்பிடறேன்!"
ஜெய்சங்கரின் இந்தப் பதிலைக் கேட்ட நண்பர் மௌனமாகிப் போனாராம்.
![உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!](https://assets.lanka4.com/banner/you.png)
![உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!](https://assets.lanka4.com/banner/fb.png)
![உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!](https://assets.lanka4.com/banner/ins.png)
![உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!](https://assets.lanka4.com/banner/tiktok.png)