அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் வேறு பகுதியில் மணல் ஏற்றிய நால்வர் கைது!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் வேறு பகுதியில் மணல் ஏற்றிய நால்வர் கைது!

அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் வேறு பகுதியில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நான்கு டிப்பர்களும் அதன் சாரதிகளும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் அனுமதிப் பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நான்கு டிபர்களும் அதன் சாரதிகளும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.  

பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக வீதிச் சோதனையின் மூலம் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.  

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளடன், தடையப் பொருட்கள் நீதிமன்ற நடவடிக்கை முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி டி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4