நாட்டை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்ல வேண்டாம் - ரணில்!

#SriLanka #Ranil wickremesinghe #sri lanka tamil news
Thamilini
1 year ago
நாட்டை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்ல வேண்டாம் - ரணில்!

அநுரகுமார திஸாநாயக்க சர்வதேச நாணய நிதியத்துடன் இது வரை கலந்துரையாடவில்லை என சுயேச்சை ஜனாதிபதி வேட்பாளர்  ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.  

அம்பாறை பிரதேசத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட போதே ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “எல்லோரும் வேண்டாம் என்று சொன்னபோது ஒன்றுபட்டு நாட்டையே மாற்றினோம், இதைத் தாங்க முடியாமல் அரசியல் கட்சிகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்று சேர்ந்தோம்.

ஏனென்றால் அனைவரையும் வாழ வைப்போம்.ஒன்றாக இணைந்து இந்த நாட்டை வளர்த்தோம். ரூபாய் வலுவடைந்தது. சரக்குகளின் விலை இன்னும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விட்டது.

 அவர்கள் IMF உடன் பேசவில்லை, நாட்டை மீண்டும் அந்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!