நாடளாவிய ரீதியில் அரச மருத்துவ அதிகாரிகள் வேலைநிறுத்தம்!

#SriLanka #Hospital #strike #doctor
Mayoorikka
1 year ago
நாடளாவிய ரீதியில் அரச மருத்துவ அதிகாரிகள் வேலைநிறுத்தம்!

நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளை இலக்கு வைத்து புதன்கிழமை (18) தொழிற்சங்க நடவடிக்கையொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது.

 புதன்கிழமை (18) காலை 8 மணிக்கு வேலைநிறுத்தம் தொடங்க உள்ளதாகவும், இதனால் மருத்துவ சிகிச்சை வழங்குவதில் இடையூறு ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

 முறையான முறைப்பாடு எதுவுமின்றி GMOA ஊவா மாகாண இணைப்பாளரும் உதவிச் செயலாளருமான டொக்டர் பாலித ராஜபக்ஷவுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு எதிராக இந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டாக்டர் விஜேசிங்க தெரிவித்தார்.

 இந்த சம்பவம் தொடர்பான மறுசீரமைப்பு செயல்முறையை தொடங்குவதற்கு GMOA சுகாதார அமைச்சுக்கு 14 நாள் கால அவகாசம் வழங்கும் என்றும் அவர் கூறினார். இதற்குள் சாதகமான பதில் கிடைக்காவிட்டால், மாத இறுதியில் நடைபெறும் மத்தியக் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4