இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று!

#SriLanka #Election
Thamilini
1 year ago
இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று!

இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று (21) ஆரம்பமாகவுள்ளது. 

 வாக்காளர்கள் அதிகாலையில் சென்று தங்களின் பெறுமதியான வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். 

 அதன்படி, நாடு முழுவதிலும் உள்ள 13,421 வாக்களிப்பு நிலையங்களில் இன்று காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ளது.

 இந்நாட்டின் வரலாற்றில் ஜனாதிபதித் தேர்தலில் அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் இந்த வருடம் தோற்றுள்ளனர். அதற்கு 39 பேர் போட்டியிட்டனர், ஆனால் வேட்பாளர்களில் ஒருவரான திரு.முகமது இல்லயாஸ் மரணமடைந்ததால், அது 38 ஆகக் குறைந்தது. 

 இதேவேளை, இந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 17,140,354 ஆகும். 22 தேர்தல் மாவட்டங்களில் அதிக வாக்காளர்களைக் கொண்ட மாவட்டமாக கம்பஹா மாவட்டம் மாறியுள்ளதுடன் அந்த மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 1,881,129 என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

 கொழும்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 1,765,351 ஆகும். குருநாகல் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 1,417,226 ஆகவும், கண்டி மாவட்டத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1,191,399 ஆகவும் உள்ளது. களுத்துறை மாவட்டத்தில் 1,024,244 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 923,736 பேரும், காலி மாவட்டத்தில் 903,163 பேரும், அனுராதபுரம் மாவட்டத்தில் 741,862 பேரும், கேகாலை மாவட்டத்தில் 709,622 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 

 பதுளை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 705,772 ஆகவும் மாத்தறை மாவட்டத்தில் 686,175 ஆகவும் உள்ளது. புத்தளம் மாவட்டத்தில் ஆறு இலட்சத்து 63,673 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 605,292 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 

 யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியை உள்ளடக்கிய யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 593,187 என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

 திகாமடுல்ல மாவட்டத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை 555,432 ஆகவும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை 520,940 ஆகவும் உள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 449,686 ஆகும். 

 மாத்தளை மாவட்டத்தில் இருந்து 429,991 வாக்காளர்கள் இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 

 மொனராகலை மாவட்டத்தில் இந்த எண்ணிக்கை 399,166 ஆகும். பொலன்னறுவை மாவட்டத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை 351,302 ஆகவும், திருகோணமலை மாவட்டத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை 315,925 ஆகவும் உள்ளது. குறைந்த வாக்காளர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டம் வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு உள்ளிட்ட தேர்தல் மாவட்டமாக மாறியுள்ளதுடன், வாக்காளர்களின் எண்ணிக்கை 306,081 என தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. 

 இவ்வருட ஜனாதிபதித் தேர்தலுக்கு அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஹோமாகம தொகுதியில் 215,075 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4