நாட்டில் அமைதி மக்களின் கைகளில்! பொலிஸ்மா அதிபர்

#SriLanka #Election #Police
Mayoorikka
1 hour ago
நாட்டில் அமைதி மக்களின் கைகளில்! பொலிஸ்மா அதிபர்

அனைத்து பிரஜைகளும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கு ஆதரவு வழங்கினால், அடுத்த சில நாட்களிலும் தொடர்ந்து நாட்டில் அமைதியான சூழல் ஏற்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி நிஹால் தல்துவ இன்று தெரிவித்துள்ளார்.

 இந்தத் தேர்தல் காலத்தில், தேர்தல் வன்முறைகள் மிகக் குறைந்த மட்டத்தில் இருப்பதாகத் தெரிவித்தார்.

 இதேவேளை, வாக்களிப்பு நிலையங்களை பாதுகாப்பதற்காக 63,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கு மேலதிகமாக 241 கலகம் அடக்கும் குழுக்களும் தயார் நிலையில் உள்ளதாகவும் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

 மேலும், முப்படையைச் சேர்ந்த 11,000 அதிகாரிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், ஏதேனும் தேவை ஏற்பட்டால் அவர்களை அழைக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சுமார் 3,000 அதிகாரிகள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அதேவேளை, சிவில் பாதுகாப்புப் படையின் சுமார் 13,000 அதிகாரிகளின் ஆதரவுடன் நடமாடும் ரோந்துப் பணிகளும் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.